• What I'm Doing...

    • எமது தளத்தை வோர்டுபிரஸ்ஸின் அண்மைய வெளியீட்டுக்கு மாற்றுகிறேன்.. 9 hrs ago
    • @annakannan வயிற்றுக்கு அன்றாடம் பலி கொடுப்பது பற்றிய தங்கள் கண்ணோட்டம் என்ன? 10 hrs ago
    • மட மடன்னு முடிச்சுக் கொடுக்கணும்.. 10 hrs ago
    • More updates...

    Posting tweet...

    Powered by Twitter Tools.

டிவிட்டிக்கொண்டே இருக்கலாம்…

http://twitter.com/aamachu

கட்டற்று http://identi.ca/amachu

  • Share/Save/Bookmark
Posted in பறை | Tagged , | Leave a comment

சாத்தான்களும் தேவதைகளும்…

“ஏஞ்சல்ஸ் & டேமோன்ஸ்” படிக்க வேண்டும் என நினைத்து வாங்கி வைத்த புதினம்! உரக்கமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது – வருடக் கணக்கில்! அமேரிக்காவிலிருந்து விடுப்பில் வந்திருக்கும் நண்பனுடன் முந்தா நாள் இரவு சத்யத்தில் தோன்றியது!

பாப்பரசரை கொன்று கார்டினல்களோடு சேர்த்து வாட்டிகனையே ஒழிக்க அறிவியக்கத்தார்(?) தீட்டிய திட்டம். பேராசிரியர் (பாத்திரத்தின் பெயர் நினைவில் நிற்கவில்லை) ஒருவர் திட்டப்படிகளை படிப்படியாக தகர்க்க நிகழ் நேரத்தில் திட்டங்களை தன்னைகாட்டிக் கொடுத்திடாத படி திசை திருப்பி காய் நகர்த்தும் கொலைக் கூட்ட தலைமகன்.. யாராக இருக்கும் என்ற பரபரப்பு கடைசி வரை இருந்து அப்பாடா இவன் தானா! ஒழிந்தான்! என்றிருக்க, அவனில்லை – இந்த் பூனையும் பால் குடிக்குமா எனும் படிக்கு பதிவொளியில் படம்பிடிக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்படும் கயவன்.

அடடா! யாருன்னு சொல்லிட்டா நீங்க படம் பார்க்கணும் தானே!

  • Share/Save/Bookmark
Posted in கேளிக்கை | Tagged | 1 Comment

மனச் சஞ்சலம் :-(

இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது எமது அண்ணனை கால் சிகிச்சைக்காக சித்தூருக்கு அம்மா அழைத்துச் சென்றிருந்தார். நான் வடலூரில் மாமா வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தேன். எட்டு வயது? விடுதலை வரலாறு – காந்தி – நேரு பற்றியெல்லாம் கதைக் கேட்டு காங்கிரஸ் மீது பள்ளிப் பிராயத்திலே பலத்த அபிமானம் இருந்ததுண்டு… இராஜீவ் கொல்லப்பட்டதாகவும் சித்தூரில் நிலைமை சரியில்லை எனவும் எமக்கு தெரிவிக்கப்பட்ட தருணம் இன்றும் நினைவில் இருக்கிறது.

துன்பமான நினைவு.. நாளை மறுநாளோடு பதினெட்டு வருடங்கள்..

இலங்கை இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் மடிந்த வேலுப்பிள்ளை பிராபாகரனின் மரணச் செய்தி மனச் சஞ்சலப்படுத்தும் நிகழ்வாகும்.

பல்வேறு காரணங்களுக்காக வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கு மரணந்தான் தீர்ப்பாககக் கூடும் என்று நினைத்ததுண்டு. அதுவே இன்று ஏற்பட்டும் விட்டது. ஆனால் ஓசாமா பின்லேடன், அல்கொய்தா, தாலிபான் அமைப்புகளுடன் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் ஒப்பிடுவது கண்டிக்கத் தக்க செயல்.

வேலுப்பிள்ளை பிரகாகரனின் மரணம் – மனச் சஞ்சலம். அவரது தோற்றத்திற்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு கிடைத்திடவில்லை. ஆனால் அவர் பெற்றது – தக்கது.

  • Share/Save/Bookmark
Posted in ஈழம், துக்கம், நிகழ்வு | Tagged , , | 1 Comment