Archive for the ‘கேளிக்கை’ Category
சாத்தான்களும் தேவதைகளும்…
“ஏஞ்சல்ஸ் & டேமோன்ஸ்” படிக்க வேண்டும் என நினைத்து வாங்கி வைத்த புதினம்! உரக்கமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது – வருடக் கணக்கில்! அமேரிக்காவிலிருந்து விடுப்பில் வந்திருக்கும் நண்பனுடன் முந்தா நாள் இரவு சத்யத்தில் தோன்றியது!
பாப்பரசரை கொன்று கார்டினல்களோடு சேர்த்து வாட்டிகனையே ஒழிக்க அறிவியக்கத்தார்(?) தீட்டிய திட்டம். பேராசிரியர் (பாத்திரத்தின் பெயர் நினைவில் நிற்கவில்லை) ஒருவர் திட்டப்படிகளை படிப்படியாக தகர்க்க நிகழ் நேரத்தில் திட்டங்களை தன்னைகாட்டிக் கொடுத்திடாத படி திசை திருப்பி காய் நகர்த்தும் கொலைக் கூட்ட தலைமகன்.. யாராக இருக்கும் என்ற பரபரப்பு கடைசி வரை இருந்து அப்பாடா இவன் தானா! ஒழிந்தான்! என்றிருக்க, அவனில்லை – இந்த் பூனையும் பால் குடிக்குமா எனும் படிக்கு பதிவொளியில் படம்பிடிக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்படும் கயவன்.
அடடா! யாருன்னு சொல்லிட்டா நீங்க படம் பார்க்கணும் தானே!
தணிக்கை செய்யப்படணுமா சின்னத்திரை?
வெளிவரும் சினிமாக்களை தணிக்கைத் துறையினர் முன்னமே பார்த்துவிட்டு U – A – U/A சான்றுகள் அளிப்பது போல் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை வேண்டுமா? தணிக்கை நடக்கிறதா?
அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம்?
தேர்தலும் கிரிக்கெட்டும்
ஐபிஎல் போட்டி ஒத்திப்போடப்பட வேண்டும் என்பது சரிதான். தேர்தலுக்காக பல காரியங்கள் முன்கூட்டியோ பின்னரோ செய்யப்படுகின்றன. பிள்ளைகள் எழுதும் பரீட்சை – அவற்றிற்கான முடிவு எனப் பல துறையை சாரந்தவரகளும் தேர்துலுக்காக தங்களை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். இதில் ஐபிஎல்லின் பிடிவாதம் புரளும் – புரளப்போகும் பணமும் அதை விட்டுக்கொடுக்க மனசில்லாமலும் போடப்படும் சண்டையாகவே தோன்றுகிறது. இதற்கு ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியத் தேவை இல்லை. போகட்டும் ஐபிஎல் நடக்கட்டும் தேர்தல்.
ஆனால் நம்ம நாட்டில் உள்ளாட்சி – மாநிலம் – மக்களவை என இருக்கும் மூன்று தேர்தல் முறையால் ஏற்படும் தண்டச் செலவு ஏராளம்.